நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு

தென்கரைக்கோட்டை அருள்மிகு ஸ்ரீகல்யாணராமர் மற்றும் நஞ்சுன்டேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி,மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீகல்யாணராமர் மற்றும் நஞ்சுன்டேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு குழுவினர் சார்பில் கோவிலில் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் நந்தி ஆண்டவருக்கு பல்வேறு வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர் இறுதியாக பிரதோஷ வழிபாடு குழு சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story