சங்கராபுரத்தில் வள்ளலார் மன்றத்தில் பங்குனி மாத பூச விழா !

சங்கராபுரத்தில் வள்ளலார் மன்றத்தில் பங்குனி மாத பூச விழா !

பங்குனி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் பங்குனி மாத பூச விழா நடந்தது.
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் பங்குனி மாத பூச விழா நடந்தது. மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். அரிசி ஆலை சங்கத் தலைவர் வேலு, வியாபாரிகள் சங்க குசேலன், சிவா முன்னிலை வகித்தனர். இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவி கலாவதி வரவேற்றார். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் இளையாபிள்ளை முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

Tags

Next Story