சிவகாசியில் பங்குனி பொங்கல் 6 ஆம் திருவிழா !

சிவகாசியில் பங்குனி பொங்கல் 6 ஆம் திருவிழா !

ஸ்ரீமாரியம்மன்

சிவகாசியில் பங்குனி பொங்கல் 6 ஆம் திருவிழா. ஸ்ரீமாரியம்மன் 'வெள்ளி ரிஷப' வாகனத்தில் எழுந்தருளினார்.
சிவகாசி ஸ்ரீமாரியம்மன் 'வெள்ளி ரிஷப' வாகனத்தில் எழுந்தருளினார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. பங்குனி பொங்கல் 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளினார். ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. இதனையடுத்து, ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'வெள்ளி ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story