ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் !

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் !

பங்குனி தேரோட்டம் 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோரதத்துக்கு(தேருக்கு) வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரங்கா... கோவிந்தா... கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேரோட்ட விழாவையொட்டி ஸ்ரீரங்கம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேரோடும் வீதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு இருந்தது.

Tags

Next Story