அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 15ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணியில் இருந்து 6 மணிக்குள் சன்னதிக்கு முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சி கால சிறப்பு பூஜை நடைபெற்றது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சிகால பூஜையும், 11 மணிக்கு சப்பரத்தில் உற்சவ அய்யனார் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவின் 6-வது நாளான 20ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

10-ம் திருநாளானான 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 2 மணிக்கு பக்தர்கள் சுவாமிக்கு நேமிசங்கள் செலுத்தி வழிபடுகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்

Tags

Next Story