பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா

கள்ளக்குறிச்சி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.
கள்ளக்குறிச்சி பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்தும், செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கள்ளக்குறிச்சி, கரியப்பா நகர் பாலமுருகன் கோவிலில் நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோமுகி ஆற்றங்கரையிலிருந்து பால்குடம், காவடி சுமந்து, செடல் அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிேஷகம் நடந்தது. மாலை சுவாமி வீதியுலா நடந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில், விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Tags

Next Story