கும்பகோணம் கோயில்களில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

கும்பகோணம் கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள 4 கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கும்பகோணம் பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரன், கொட்டையூா் பந்தடுநாயகி அம்பிகா உடனாய கோடீஸ்வரா், திருபுவனம் அறம்வளா்த்த நாயகி உடனாய கம்பஹரேஸ்வரா், சக்கராப்பள்ளி தேவநாயகி உடனாய சக்கரவாகீஸ்வரா் ஆகிய 4 கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சுவாமி, அம்பாள், பஞ்சமூா்த்தியுடன் கொடி மரத்தின் முன் எழுந்தருளினா். பின்னா், கொடி மரத்துக்கு மங்களப்பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.

Tags

Next Story