நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா
தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்,கலசபாக்கம் அருகே அமைந்துள்ள நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி, வில்வாரணி மோட்டூர் ஊராட்சிகளில் அமைந்துள்ள நட்சத்திர முருகர் கோவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில், கலசபாக்க சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story