ஆத்தூர் : வடசென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர கொடியேற்று விழா

ஆத்தூர் : வடசென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர கொடியேற்று விழா

பங்குனி உத்திரம் 

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வருகின்ற 25ந்தேதி பங்குனி உத்திர திருத்தேர் விழா முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் மயில் வாகனத்திற்கும்,கொடிமரத்திற்க்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அங்குள்ள கொடி மரத்தில் கொடியேற்றி காப்பு கட்டி தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால் பன்னீர் சந்தனம் இளநீர் திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்த பின்னர் சந்தன காப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

Tags

Next Story