தண்ணீரை வீணாக்காதீங்க ஊராட்சி தலைவர் கோரிக்கை!

தண்ணீரை வீணாக்காதீங்க ஊராட்சி தலைவர் கோரிக்கை!

ஊராட்சி மன்ற தலைவர் 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருமயம் ஊராட்சி தலைவர் சிக்கந்தர் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய ஊராட்சி தலைவர் திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல லட்சம் லிட்டர் மதிப்பிலான குடிநீர் தினந்தோறும் வினியோகம் செய்யப்பட வேண்டியுள்ளது.

கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் ஊராட்சி வழங்கும் குடிநீரையே முழுமையாக நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்கள் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் வீணாகாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தினந்தோறும் தடையின்றி குடிநீர் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story