ஆம்பூரில் திமுக கட்சி சார்பில் நீர் மோர் பந்தல்

ஆம்பூரில் திமுக கட்சி சார்பில் நீர் மோர் பந்தல்

ஆம்பூரில் திமுக கட்சி சார்பில் நீர் மோர் பந்தலை திறக்கப்பட்டது.


ஆம்பூரில் திமுக கட்சி சார்பில் நீர் மோர் பந்தலை திறக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக கட்சி சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்! தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 'வெப்ப அலை வீசக்கூடும்' என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் ஆணைக்கிணங்க ஆம்பூர் நகர திமுக சார்பில் பேர்ணாம்பட்டு ரோடு விநாயகர் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர் - மோர் பந்தலை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர் போன்ற நீர் ஆதாரங்களை வழங்கினார். ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமுவேல் செல்லப்பாண்டியன், ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ்அகமது, நகர நிர்வாகிகள் தேவராஜ், வசந்தராஜ், கார்த்திக், மாவட்ட பிரதிநிதி அசோகன், மாவட்ட மகளிரணி தலைவர் ராதா மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுவோம்! என்று கூறினர்.

Tags

Next Story