பாபநாசம் : படைவெட்டி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

பாபநாசம் : படைவெட்டி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழா

பாபநாசம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூர் காட்டுநாயக்கன் பழங்குடியினர் தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் ஆலய 10-ஆம் ஆண்டு திருவிழா வரும் 11-மற்றும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு காப்புகட்டுதல் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக 108-சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து தப்பாட்டத்துடன் பெண்கள் புனிதநீர் மற்றும் பூக்களை ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை காட்டுநாயக்கன் பழங்குடியினர் தெருவாசிகள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story