பாபநாசம் : ரமலான் சிறப்பு தொழுகை

பாபநாசம் : ரமலான் சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை

பாபநாசத்தில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளி, வழுத்தூர், இராஜகிரி, பண்டாரவாடை உட்பட பல்வேறு பகுதிகளில், ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடினர். இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரகவாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story