பரமத்தி வேலூர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

பரமத்தி வேலூர் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

கோப்பு படம் 

பலமத்தி வேலூர் அருகே திருமணி முத்தாறு ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மகன் பூபாலன்( 30).இவர் பி.வி.சி டோர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூபாலன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் அவரை பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் பூபாலனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று காலை ஓலப்பாளையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு பாலம் வழியாக சென்றவர்கள் திருமணிமுத்தாற்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் திருமணிமுத்தாற்றில் கிடந்தவரின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நன்செய்இடையாற்றை சேர்ந்த காணாமல் போன பூபாலன் என்பது தெரியவந்தது.அதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story