மழை வேண்டி மழைக் கஞ்சி எடுத்து கும்மியடித்து வேண்டுதல்.

மழை வேண்டி மழைக் கஞ்சி எடுத்து கும்மியடித்து  வேண்டுதல்.

கும்மி 

பரமத்தி வேலூரில் பொதுமக்கள் மழை வேண்டி மழைக் கஞ்சி எடுத்து கும்மியடித்து வர்ணபகவானை அழைத்தனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை கண்டிராத வகையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாத வகையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் விவசாய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி காய்ந்து வருகிறது. இதில் இருந்து விடுபடுவதற்காக பரமத்தி வேலூர், செட்டியார் தெருவில் உள்ள பொதுமக்கள் வீடு வீடாக சென்று உணவை வாங்கி வந்து சக்தி விநாயகர் கோவில் முன்பு உப்பில்லாமல் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து மழை வேண்டி வருண பகவானை அழைத்து விநாயகர் கோவில் முன்பு கும்மி அடித்து வேண்டினர். அதனை தொடர்ந்து சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story