துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்!

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்!

கொடி அணிவகுப்பு ஊர்வலம்

ஆரணியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், போலீசார் நகரின் முக்கிய வீதியின் வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இதில் ஆரணி தாலுகா காவல் ஆய்வாளர் ராஜாங்கம், உதவி காவல் ஆய்வாளர்கள் சுந்தரேசன், அருண்குமார் உள்ளிட்ட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story