நாடாளுமன்றத் தேர்தலையொட்டி துணை ராணுவ அணிவகுப்பு !

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி துணை ராணுவ அணிவகுப்பு !

ராணுவ அணிவகுப்பு 

மதுராந்தகம் அருகே நாடாளுமன்றத் தேர்தலையொட்டி துணை ராணுவ அணிவகுப்பு நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் 18 -வது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தலை முன்னிட்டு செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாமூர், செய்யூர் அணைக்கட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் 100% வாக்கு அளிக்க வேண்டும் வாக்காளர்கள் எந்தவித அச்சுறுத்தலோ அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிக்கவும்,அதை வலியுறுத்தும் வகையில்துணை ராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினர் அணிவகுப்பு நடத்தினர். பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எதிரே தொடங்கிய அணிவகுப்பு சித்தாமூர் கூட்ரோடு, சூனாம்பேடுரோடு, செய்யூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றன. இந்த போலீஸ் அணிவகுப்பிற்கு மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி தலைமையில் மதுராந்தகம் உட்கோட்டத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் குழுவினர் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு அணி வகுப்பு நடத்தினர்.

Tags

Next Story