புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 218 துணை ராணுவ படையினர் வருகை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 218 துணை ராணுவ படையினர் வருகை

மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து 218 துணை ராணுவப் படையினர் வந்தனர்.


மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து 218 துணை ராணுவப் படையினர் வந்தனர்.

மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து 218 துணை ராணுவப் படையினர் வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 218 துணை ராணுவப்படையினர் ஒடிசா மாநிலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களைக் கொண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி வழியாக நகர்மன்றத்தை அடைந்தது. அங்கு, துணை ராணுவப் படையினருடனுடன் தேர்தல் பணிகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பேசினார்.இந்த நிகழ்ச்சியில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராகவி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story