போதைக்கு அடிமையான மகனை அடித்து கொலை செய்த பெற்றோர் கைது

போதைக்கு அடிமையான மகனை அடித்து கொலை செய்த பெற்றோர் கைது

சிவகாசி அருகே போதைக்கு அடிமையான மகனை அடித்து கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.  

சிவகாசி அருகே போதைக்கு அடிமையான மகனை அடித்து கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே மகனை அடித்து கொலை செய்த பெற்றோர் கைது.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மற்றும் பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.தந்தை சுப்பிரமணியன் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்,

அவருடைய மகன் அய்யனார்(20) தனது தந்தையுடன் சேர்ந்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.அய்யனார் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வீட்டில் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு தாய்,தந்தையை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் போதையில் இருந்து அய்யனார் வீட்டை விற்று 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தனது தந்தையுடன் கடும் வாக்குவாதம் நடந்த போது அருகில் இருந்த அவரது பாட்டியை அய்யனார் தாக்கி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் மற்றும் மனைவி பேச்சியம்மாள் ஆகியோர் கோபத்தில் மகனை உலக்கையால் தலையில் தாக்கிய நிலையில் அய்யனார் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்ததாக தெரிய வருகிறது.மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் போலீசார் உயிரிழந்த அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்றோர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story