திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் பாவம்- ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு

திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் பாவம்-  ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு

பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கிராமத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பாஜ கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பைஞ்சீலி கிராமத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பாஜ கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, பல பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள், தண்ணீர் தொட்டிகள், சாலைகள், சமுதாயக் கூடங்களை கட்டித் தந்தேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 1,200 பேருக்கு இலவசமாக உயர்கல்வி வழங்கியுள்ளேன்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்றால், 1500 குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கொடுப்பேன். திமுகவுக்கு நீங்கள் ஒட்டு போட்டால் உங்களுக்கு பாவம் தான் வந்து சேரும்.கடந்த தேர்தலில் 6 லட்சம் வாக்குகள் பெற்று, 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். மண்ணச்சநல்லூர் தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்றேன்.

அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைத்து புதிய ரயில் பாதை கொண்டு வருவேன். இந்த முறை மீண்டும் 1,200 மாணவர்களை இலவச மாக உயர்கல்வி படிக்க வைப்பேன். திமுக அமைச்சர் நேரு அரசியலுக்கு வரும் போது, 2 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்தார்.

ஆனால்,தற்போது, 500 ஏக்கர் நிலம் வைத்துள்ளார் என்று பேசினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஐஜேகே பொது செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், பாஜ புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன், மாவட்ட தலைவர் செல்வகுமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story