பாஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு வாக்கு சேகரிப்பு

பாஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு வாக்கு சேகரிப்பு

 கிருஷ்ணகிரியில் வேட்பாளர் நரசிம்மனுக்கு, ஆதரவாக பாஜ., வின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், ஓட்டலில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரியில் வேட்பாளர் நரசிம்மனுக்கு, ஆதரவாக பாஜ., வின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், ஓட்டலில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்தார்.

ஓசூரில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பிஜேபி வேட்பாளருக்கு ஆதரவாக பன் பரோட்டா சுட்டு வேலூர் இப்ராஹிம் வாக்கு சேகரிப்பு.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சி நரசிம்மனுக்கு, ஆதரவாக பிஜேபியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வாக்கு சேகரித்தார்.

பழைய பெங்களூர் சாலை மற்றும் காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பிஜேபியின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு ஹோட்டலில் பன் பரோட்டா சுட்டு துண்டு பிரசுரர்களை வழங்கி வாக்கு சேகரித்தார், பன் பரோட்டாவை சுட்டு அவரே அதை வாங்கியும் சென்றார் இந்நிகழ்வு உடன் வந்தவர்கள் நகைப்புடன் சென்றனர்

Tags

Next Story