பாக முகவர்கள் கூட்டம் - எம்எல்ஏ பங்கேற்பு

சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கழகத்தின் சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
சோழிங்கநல்லூர்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கழகத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் பாக முகவர்கள் எனும் BLA-2 கூட்டத்தில் கலந்து கொண்டு,வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டும். கழக தலைவர் முதல்வர் அவர்களின் பிறந்த நாளில்,கழக இருவண்ண கொடி ஏற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமெனவும், அனைத்து வார்டுகளிலும் மாலை நேரங்களில் வீடுவீடாக சென்று கழக அரசின் திட்டங்களை துண்டறிக்கையை வழங்கி இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரையை எடுத்துரைக்க வேண்டுமெனவும், அதே போல் கழக அரசின் மூன்றாண்டு திட்டங்கள் ம‌ற்று‌ம் சாதனைகளை வீடுவீடாக சென்று பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென பாக முகவர்கள் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வி.பி கலைராஜன் மற்றும் தாடா சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story