எதிர்த்து கேள்வி கேட்ட வரை அடித்து உதைத்த கட்சியினர்

எதிர்த்து கேள்வி கேட்ட வரை அடித்து உதைத்த கட்சியினர்

தேவகோட்டையில் எதிர்த்து கேள்வி கேட்ட நபரை, கட்சியினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவகோட்டையில் எதிர்த்து கேள்வி கேட்ட நபரை, கட்சியினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே திமுக பேச்சாளர் ஐ.லியோனி சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கிண்டல் செய்து பேசி வந்தார்.

இதை பார்த்த ஹிந்து முன்னணி மாவட்ட ஊடகப்பிரிவு மதுரை செல்வன் என்பவர் எதிர்த்து கேள்வி கேட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்து கூட்டத்திலிருந்து அனுப்பி வைத்தனர். அவர் பேருந்து நிலையம் சென்றபோது அங்கு விரட்டிச் சென்ற திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை கடுமையாக தாக்கினர். அவரிடமிருந்து செல்வத்தை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story