மகளிர் வேட்பாளர்களுக்கு கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது-வானதி

மகளிர் வேட்பாளர்களுக்கு கட்சி  முக்கியத்துவம் அளிக்கிறது-வானதி

செய்தியாளர்களை சந்தித்த வானதி

மகளிர் வேட்பாளர்களுக்கு கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க மகளிர் அணி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,ஹரியானா எம்.பி சுனிதா துக்கல் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வுக்கு பின்னர் எம்.பி சுனிதா துக்கல்,வானதி சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது உலகிலேயே பெரிய கட்சி பா.ஜ.க வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மகளிர் அணியை உத்வேகபடுத்த இந்த கூட்டம் நடத்தப்படுகிறது எனவும் பா.ஜ.க அனைவரையும் ஒருங்கிணைக்கும் கட்சி எனவும் பிற கட்சிகள் மக்களை பிளவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது கட்சியின் அனைத்து அணிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக கொண்டு இருக்கின்றது எனவும் இதன் ஒரு பகுதியாக கோவையில் மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று நிறைவடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மகளிர் அணி செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்த அவர் நீலகிரி மாவட்டத்தில் நாளை மகளிர் அணி மாநாடு நடைபெறுகின்றது எனவும் அதிலும் கலந்து கொள்கின்றோம் எனவும் இதேபோன்று மாவட்ட வாரியாகவோ தனித்தனியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிற மாநிலங்களில் மாநில அளவில் மகளிர் மாநாடுகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

அதிகமான மகளிர் பா.ஜ.கவிற்கு வாக்களிப்பதை உறுதி செய்து பணியாற்றுகின்றனர் என தெரிவித்த அவர் கட்சி மகளிர் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது எனவும், மகளிர் வேட்பாளர்களை உருவாக்குவதிலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைக்க தூது சென்றாரா? என்ற கேள்விக்கு த.மா.க தலைவர் வாசன் தே.ஜ.கூ இருக்கின்றார் எனவும் அவர் இன்னொரு தலைவரை அவர் போய் பார்த்து இருப்பது யார் யாருக்கு தூது ? என கேள்வி எழுப்பிய அவர் பா.ஜ.க தூது அனுப்புகிறார்கள் என்றால் அது கட்சி தலைமைக்குதான் தெரியும் எனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சி துவங்கி இருக்கும் நடிகர்விஜய்க்கு வாழ்த்துகள் எனவும் மக்கள் பணி செய்ய களத்துக்கு வருகின்றார் வரட்டும் எனவும் தெரிவித்தார்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அவர் வலியுறுத்தி இருக்கின்றார் எனவும் பா.ஜ.க பணி செய்வதே மக்களுக்குதான் எனவும் தெரிவித்தார்.கட்சி தலைமை வேட்பாளர்களை முடிவு செய்யும் எனவும் தெரிவித்த அவர் தமிழகத்திற்கு பிரதமர் வருகை தேதி முடிவு செய்யவில்லை அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.

மோடியை பிரதமராக ஏற்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் இணைய அழைக்கின்றோம் எனவும் மீண்டும் மோடிதான் என்ற சூழல் உருவாகி இருக்கின்றது எனவும் ஊழலுக்கு எதிரான ஓரே கட்சி பா.ஜ.கதான் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Tags

Next Story