தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி

தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி

தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி

தே.மு.தி.க., தலைவர் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தே.மு.தி.க., வினர் விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். இதையொட்டி கள்ளக்குறிச்சி தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமையில் மாவட்டம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட அவைத்தலைவர் கருணாகரன், துணைச் செயலாளர் கோவிந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் செழியன் முன்னிலையில் அக்கட்சியினர் விஜயகாந்தின் படத்திற்கு மலர் துாவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.


Tags

Next Story