பஸ் வசதி இல்லை... பயணிகள் அவதி

பஸ் வசதி இல்லை... பயணிகள் அவதி

நெல்லையில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

நெல்லையில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து வழியாக பயணம் செய்கின்றனர்.அதிலும் குறிப்பாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி,வீரவநல்லூர் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் தினமும் அவதி அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

எனவே இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம்,சேரன்மகாதேவி,வீரவநல்லூர்,அம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் சரிவர இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story