வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணியர் அவதி

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணியர் அவதி

வாலாஜாபாத் பேருந்து நிலையம்

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் புதிதாக குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பிரதான சாலையில் இருந்து, சுங்குவார்சத்திரம் நோக்கி செல்லும் சாலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. வாலாஜாபாத் மற்றும் சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர், தினசரி வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பேருந்து பிடித்து செல்கின்றனர்.

இப்பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, பயணியர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அதன்பின் முறையான பராமரிப்பின்றி அத்தொட்டி பழுதடைந்து இடிந்தது. அதைத் தொடர்ந்து, இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், வெயில் நேரங்களில் தாகத்தில் தவிக்கின்றனர். எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் புதிதாக குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story