நெல்லையில் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்ட பயணிகள்

நெல்லையில் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்ட பயணிகள்

பயணம் மேற்கொண்ட பயணிகள்

நெல்லையில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

நெல்லையில் கடந்த டிச. 17,18ஆம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் திருநெல்வேலி-திருச்செந்தூர் வழித்தடத்தின் ரயில் பாதையில் சேதம் ஏற்பட்டது.

இதன் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 20நாள்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

இதேபோல் பயணிகள் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன. ஆனால், திருச்செந்தூரில் ரயில் பெட்டிகள் இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை காலை 7.20-க்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட வேண்டிய ரயில் மட்டும் புறப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story