போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் - சாா்ஜா தொழிலாளி கைது

போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் - சாா்ஜா தொழிலாளி கைது

கைது 

அரியலூா் மாவட்டம், நடுவலூா் அருகேயுள்ள காரைக்கட்டளைக் குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் கோ. அறிவழகன். இவா், அரபுநாடுகளில் ஒன்றான சாா்ஜாவில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நேற்று அவா் ஊா் திரும்பினாா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவினா் மேற்கொண்ட சோதனையில், அவா் தனது பிறந்த தேதியை போலி ஆவணம் மூலம் மாற்றி கடவுச்சீட்டு பெற்று, வெளிநாடு சென்று திரும்பியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

Tags

Next Story