ஜெயங்கொண்டம் அருகே பசுமாடு மீது மின்னல் தாக்கி உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே பசுமாடு மீது மின்னல் தாக்கி உயிரிழப்பு

உயிரிழந்த பசுமாடு

ஜெயங்கொண்டம் அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது மின்னல் தாக்கி உயிரிழந்தது .

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் செக்கடித் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு(55) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் தனது சினை பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.

மேய்ச்சல் முடிந்து இரவு நேரத்தில் மாட்டை ஒட்டி வந்து வீட்டில் கட்டுவது வழக்கம்.இந்நிலையில் மாடு மேய்ச்சலுக்காக கட்டி வைத்ததை நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு பெய்த மழை காரணமாக வயலில் மேய்ந்து கொண்டிருந்த சினைப்பசு மாடு மீது இடிமின்னல் தாக்கியது. இதில் பசுமாடு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

சத்தம் கேட்டு ஓடி பார்த்த போது சினைப் பசுமாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மின்னல்தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story