மயானத்திற்கு பாதை - பொதுமக்கள் கோரிக்கை

மயானத்திற்கு பாதை - பொதுமக்கள் கோரிக்கை
பாதை இல்லாததால் அவதி 
செங்கல்பட்டு மாவட்டம்,பொறையூர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,பொறையூர் கிராமம். இங்கு சுமார் 1300 வாக்காளர்கள் இங்கு உள்ளனர்..இந்த கிராமத்துக்கு என ஒரு சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு போகும் பாதை பல தலைமுறைகளாக பிரச்சனைக்குரியதாகவே உள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள். சரியான பாதை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கழுத்தளவு தண்ணீர் நிற்கும் சோகம் ஒருபுறம் என்றால் மழை இல்லாத காலங்களிலும் குறைந்தது முழங்கால் அளவு தண்ணீர் இந்த பாதையில் தேங்கி நிற்கின்றது. இதனால் இந்த கிராமத்தில் இறக்கும் ஒவ்வொருவரையும் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி எடுத்துச் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story