பாதையாத்திரை நிறைவு விழா - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் தீவிரம்

பல்லடத்தில் என் மண் என் மக்கள் பாதையாத்திரை நிறைவு விழா பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல்லடத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா-பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் தீவிரம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்லடத்தில் நடைபெற உள்ள பொது கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இப்பொதுக்கூட்டமானது பிரமாண்டமான முறையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 5 லட்சம் பேர் அமரும் வகையில் மேற்கூரையுடன் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மாநாடு நடைபெற உள்ள மாதப்பூர் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகளும் விழா மேடை அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்கான கூடங்கள் அமைக்கும் பணிகளும் மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வரவுள்ளதை தொடர்ந்து மாநாட்டு திடலுக்கு அருகிலேயே ஹெலிபேட் (helipad) அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் பிப்ரவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு ஏற்பாடுகள் குறித்து விழா ஏற்பாட்டாளரும் பாஜக மாநில பொதுச் செயலாளருமான முருகானந்தம் கூறுகையில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். கூட்டம் அதிகமாகும் என்ற காரணத்தால் கூடுதல் ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். மிகப்பெரிய அரசியல் எழுச்சியோடு இந்த மாநாடு நடைபெற உள்ளது.மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் தினம்தினம் நூற்றுக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். 27 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு சில மாவட்டங்களில் இருந்து பாஜக தொண்டர்கள்நடைபயணமாகவும்,மிதிவண்டியிலும்,மாட்டு வண்டி மூலமாகவும் வந்து பங்கேற்க உள்ளனர்.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிறைவு விழாவிற்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். பாஜகவினர் நன்கொடை என்கின்ற பெயரில் கட்டாய வசூல் செய்வதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி உண்மை அல்ல எனவும் மாநாட்டை எப்படியெல்லாம் கெடுக்க வேண்டுமோ அதற்கான வேலைகளை காவல்துறையின் மூலமாகவும் அரசு அதிகாரிகள் மூலமாகவும் இது போன்ற பொய் செய்திகளை பரப்புகின்றனர். பாஜகவின் எழுச்சியை அவர்களால் தாங்க முடியவில்லை. ஆளுங்கட்சிகள் மாநாட்டு எண்ணிக்கையை எப்படி குறைப்பது, எப்படி பொய்வழக்கு போடுவது என செயல்பட்டு வருகின்றனர். இந்தியா முழுவதுமே எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டுமே நன்கொடை பெறுகிறோம்.ஆக்கபூர்வமான அரசியலை நோக்கி சென்று கொண்டுள்ளோம்.பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story