சிவன் கோவிலில் பத்திர தீபத் திருவிழா!

சிவன் கோவிலில் பத்திர தீபத் திருவிழா!

  தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் பத்திர தீபத் திருவிழா நடந்தது.  

தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் பத்திர தீபத் திருவிழா நடந்தது.

இன்று தை அமாவாசை கொண்டாடப்படுகிறது இதயொட்டி தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பத்திர தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் மண் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது இதைத் தொடர்ந்து சுவாமி ,அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ரிஷப வாகனத்திலும் விநாயகர் எலி வாகனத்திலும் முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்தி களின் புறப்பாடு நடைபெற்றது.

இதை ஒட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்று ரத வீதியில் வழியாக பஞ்சமுக மூர்த்திகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு சென்றனர்

Tags

Next Story