நகராட்சி குப்பை புகையால் நோயாளிகள் அவதி

நகராட்சி குப்பை புகையால் நோயாளிகள் அவதி

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே நகராட்சி குப்பை புகையால் நோயாளிகள் அவதிப்படும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே நகராட்சி குப்பை புகையால் நோயாளிகள் அவதிப்படும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே நகராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர். தற்போது குப்பைகளை தீவைத்து எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்

Tags

Next Story