பட்டுக்கோட்டை : மார்ச்.22 ல் அஞ்சல் குறை தீர் கூட்டம்

பட்டுக்கோட்டை : மார்ச்.22 ல் அஞ்சல் குறை தீர் கூட்டம்

பைல் படம் 

பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 22- ஆம் தேதி அஞ்சல் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளதாக அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 22- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலாண்டு அஞ்சல் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து வகையான அஞ்சலக சேவைகள் சம்பந்தமான புகார்கள் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் வருகிற 18-ஆம் தேதிக்குள் (திங்கட்கிழமை) பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளருக்கு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலக சேவைகள் சம்பந்தமான தங்களது கருத்துகளையும் குறைகளையும் தெரிவிக்கலாம்" என பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story