ப.சிதம்பரத்திடம் கேள்வி கேட்ட மூதாட்டி - காங்கிரஸ் கட்சியினர் காட்டம்

ப.சிதம்பரத்திடம் கேள்வி கேட்ட மூதாட்டி - காங்கிரஸ் கட்சியினர் காட்டம்

கேள்வி கேட்ட மூதாட்டி 

மானாமதுரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ப.சிதம்பரத்திடம் மூதாட்டி ஒருவர் பல்வேறு குறைகளை சொல்லி கேள்விகளை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஒரு மூதாட்டி பல்வேறு கோரிக்கை கூறிக்கொண்டே இருந்தார். அவரும் என்னம்மா செய்யணும், என்னம்மா செய்யணும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ரோடு இல்லை, தண்ணி இல்லை, பட்டா இல்லை என சொல்லிக் கொண்டே இருக்கும் போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சென்று விட்டார்.

பின்னர் மூதாட்டி ஓட்டு கேட்க மட்டும் தேர்தல் நேரத்தில் சரியாக வந்து விடுறாங்க. இப்பதானே எங்களுடைய பிரச்சனைகளை கூற முடியும், அப்புறம் எப்ப கூற முடியும், நாங்க யார் கிட்ட போய் முறையிடுவது என பேசிக் கொண்டிருக்கும் போதே, காங்கிரஸ் கட்சியினர் பஞ்சாயத்து பிரச்சினை எல்லாம் ஊராட்சி மன்ற தலைவர் தீர்த்து வைப்பார். இங்கே வந்து ஏம்மா சொல்ற என மூதாட்டியிடம் கோபமாக பேசினர்.

Tags

Next Story