திருப்பத்தூரில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி

திருப்பத்தூரில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி

திருப்பத்தூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணியாகச் சென்றனர்.


திருப்பத்தூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணியாகச் சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணியாகச் சென்றனர். 138 வது மே தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மணவாளன் தலைமையில் மணியளவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை அமைதி பேரணியாக வந்தனர். அதன் பின்னர் பாச்சல் கிராமத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க அலுவலகத்தில் சங்ககொடியை ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்வில் துணைத்தலைவர் குபேந்திரன் செயலாளர்கள் அன்பு, சீனிவாசன், சங்கர், திருப்பதி, மூர்த்தி, சரவணன், சங்க நிர்வாகிகள் என பலர் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story