குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை

சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது,

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நிலம், எலந்தகுட்டை பகுதியில் உள்ளது. இங்கு, பள்ளிபாளையத்தில் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்ய, பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பலர் அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. கழிவுநீருடன், சாயக்கழிவு நீரும் சேர்ந்து வருவதால், இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம், இங்குள்ள நிலத்தடி நீர் மாசுபடும், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

எனவே இங்கு பிளாண்ட் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ.க்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மீண்டும் ஒரு தேதியில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story