திண்டிவனம் அருகே லாரி மோதியதில் நடந்து சென்றவர் பலி

திண்டிவனம் அருகே லாரி மோதியதில் நடந்து சென்றவர் பலி

பைல் படம் 

திண்டிவனம் அருகே நடந்து சென்றவர் மீது லாரி மோதிய விபத்தில் உயிழந்தவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த லாரியை சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அழகாபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 23) என்பவர் ஓட்டினார். திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியில் வந்தபோது, லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நடந்து சென்ற 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் மீது மோதியதோடு, அங்குள்ள பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவ லின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் விபத்தில் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story