அத்துமீறி குட்கா விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

அத்துமீறி குட்கா விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

பைல் படம்

கள்ளக்குறிச்சியில் அத்துமீறி குட்கா விற்பனை செய்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொது இடங்களில் புகை பிடித்த, மற்றும் குட்கா விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான சுகாதாரத் துறையினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது பஸ் நிலையத்தில் புகை பிடித்த 4 பேருக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து காய்கறி மார்க்கெட், பள்ளிக்கு அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story