ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

பெரம்பலூரில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் மார்ச் 2 -ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வசெயலாளர் சிங்கபெருமாள் முன்னிலை வகித்தார் மாவட்ட துணை தலைவர் பழனிமுத்து வரவேற்புரை ஆற்றினார், கூட்டத்தில் தமிழ் செம்மல் விருது பட்டம் பெற்ற வேள் இளங்கோ ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது,மேலும் கூட்டத்தில், தமிழக முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, போராடிவரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தும், இன்று நடந்த கூட்டத்தில் சிறப்பு கண் மருத்துவ சிகிச்சை முகாம் இலவசமாக நடத்தி அனைவருக்கும் சிகிச்சை வழங்கிய வாசன் கண் மருத்துவமனைக்கு நன்றி தெரிவித்தும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இறுதியாக பெரம்பலூர் மாவட்ட சங்கத்தின் உறுப்பினர் பொன்னுசாமி மனைவி லலிதா அவர்களின் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவத் தலைவர் செந்தமிழ் செல்வன், சங்க ஆலோசகர் அண்ணாதுரை, மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், தெய்வமணி, செல்வராஜ், மாயவேல், இணைச் செயலாளர்கள் பொன்னுசாமி, மணி, ரத்தினம், சண்முகம், அமைப்புச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, லட்சுமணன், மகளிர் அணி செயலாளர் புஷ்பராணி, மாவட்ட பொருளாளர் முருகையா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story