ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம் 

பெரம்பலூரில் நடந்த ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குநரகத்தின் இணை இயக்குநர், கமலநாதன், தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 35 நபர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை தொடர்பாக 21 மனுக்கள் பெறப்பட்டு 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 17 மனுக்களையும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி 15 தினங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சென்னை, ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்டக் கருவூல அலுவலர் இரவிச்சந்திரன், கூடுதல் கருவூல அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின்கணக்குகள் பிரிவு நேர்முக உதவியாளர் நாகவள்ளி, மற்றும் ஓய்வூதிய இயக்குநரக முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story