ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் பிப்., 2ம் தேதி நடப்பதால், கோரிக்கைகளை ஜன., 10க்குள் அனுப்புமாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  

ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் பிப்., 2ம் தேதி நடப்பதால், கோரிக்கைகளை ஜன., 10க்குள் அனுப்புமாறு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 02.02.2024 காலை 10.00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.


இதில் ஓய்வூதிய இயக்குநர். ஓய்வூதிய இயக்குநரகம், சென்னை அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் இதர ஓய்வூதிய பயன்கள் முதலியவற்றிற்கான உத்திரவுகள் இந்நாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தால், இது குறித்து தங்களது கோரிக்கைகளை ஓய்வூதிய புத்தக எண், ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்தின் பெயர் மற்றும் ஓய்வு பெற்ற நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு இரட்டைப் பிரதியில் (in Duplicate) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு 10.01.2024-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அனைத்து மனுக்களும் உரிய அலுவலருக்கு தக்க நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலரால் நேரடியாக உரிய ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story