கும்பகோணம்: பொதுமக்கள் எதிர்ப்பு

கும்பகோணம்:  பொதுமக்கள் எதிர்ப்பு

பொதுமக்கள் எதிர்ப்பு

கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் தார் சாலை அமைப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி பகுதியான, ஜாமியா நகர் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் தற்போது அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாலையை முழுமையாக போடாமல் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே பெயரளவில் ஜல்லிகற்கள் நிரப்பப்பட்டு சாலை பணியானது நடைபெற்று வருகிறது, இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தரமான சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story