சாலையில் சுற்றித் திரியும் ஒற்றை குதிரையால் பொதுமக்கள் அச்சம்

சாலையில் சுற்றித் திரியும் ஒற்றை குதிரையால் பொதுமக்கள் அச்சம்

சாலையில் சுற்றி திரியும் குதிரை 

பள்ளிபாளையம் பிரதான சாலை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை குதிரையால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலை, குமாரபாளையம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், கடந்த சில மாதங்களாக ஒற்றைக் குதிரை ஒன்று சுற்றித் திரிகிறது. மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தன்னந்தனியே சுற்றி திரியும் இந்த குதிரை, திடீரென சாலையை கடப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இரவு நேரத்திலும், இருட்டுப் பகுதியில் குதிரை இருப்பதால் எதிர்வரும் வாகனங்களுக்கு குதிரை இருப்பதே தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது.எனவே இந்த குதிரையை வனத்துறையினர் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது..

Tags

Next Story