கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையால் மக்கள் அச்சம்.

நீலகிரி மாவட்டம் பாடந்துரை கற்கப்பாளியில் அவ்வப்போது கால்நடைகளை சிறுத்தை தாக்கி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பாடந்துரை கற்கப்பாளி பகுதியில் ராஜன் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த இரண்டு ஆடை ந்ற்று இரவு சிறுத்தை தாக்கி உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் அவ்வப்போது இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வனத்துறை சார்பில் வழங்கும் இழப்பீடு தொகை மிக குறைவாக இருப்பதாகவும் தகுந்த இழப்பீடு மற்றும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story