ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சிந்துப்பூந்துறை செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் நெல்லை சந்திப்பில் இருந்து சிந்துப்பூந்துறை செல்லும் சாலையில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக அகற்றினர்.குறிப்பாக இங்கு பல ஆண்டுகளாக இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story