பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சி

பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சி

இலவச கேஸ் சிலிண்டர்

பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரச்சாரம் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப். 19ல் நடக்கவுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மாவட்ட பொதுச்செயலர் சரவணராஜன், நகர தலைவர் சேகர் உள்பட பலர் வார்டு வாரியாக பா.ஜ.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட இது குறித்து நகர அரசு தொடர்பு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது: பா.ஜ.க. அரசின் திட்டமான உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர், இலவச அடுப்பு, லைட்டர், டியூப், ரெகுலேட்டர் ஆகியன வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் மிகுத்த பயன் பெற்று வருகிறார்கள். இரண்டாவது சிலிண்டருக்கு 340 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story