மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலை வருகிறது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கியது கடந்த சில தினங்களாக 109 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்து அனல் காற்று வீசி வாட்டி வதைக்கியது இந்நிலையில் இரண்டு நாளாக வாணியம்பாடி ஆம்பூர் மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்து வந்தது இந்நிலையில் இன்று திடீரென்று கருமேகங்கள் திரண்டு சூறைக்காற்றுடன் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி திருப்பத்தூர் கந்திலி குனிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் லேசாகவும் மழை பெய்தது நாட்றம்பள்ளி வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலைவி வருகிறது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story