விழுப்புரத்தில் போதிய பேருந்து இல்லாததால் பொதுமக்கள் அவதி

விழுப்புரத்தில் போதிய பேருந்து இல்லாததால் பொதுமக்கள் அவதி

பயணிகள் அவதி 

பௌர்ணமி அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரத்தில் இருந்து அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பௌர்ணமி,அம்மாவாசை, வந்தாலே கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.

குறிப்பாக வளவனூர், பண்ருட்டி.கப்பியாம் புலியூர், விக்கிரவாண்டி இதர கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் இதனால் கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிக்கு வேலைக்கு வந்து திரும்ப வீட்டுக்குச் செல்லும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையங்களையும், பேருந்து நிறுத்தங்களில் தவித்து வருகின்றனர்.

இது போன்ற நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Tags

Next Story